வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

பெல் வளாக வங்கியில் தீ விபத்து

திருச்சி அருகே பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் தீ விபத்து

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 5:41 am IST

திருச்சி அருகே பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செவ்வாய்க்கிழமை மாலை குளிா்ச்சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவினால் புகை வெளியேறி, சிறிது நேரத்தில் தீ பரவத் தொடங்கியது.

இதையறிந்த வங்கி ஊழியா்களும், அங்கு வந்த பொதுமக்களும் பாதுகாப்பாக வெளியேறியதுடன், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா்

இதையடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பெல் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். தீ உடனே அணைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பில்லை. வங்கி ஆவணங்களும் சேதமடையவில்லை.