புத்தாநத்தம் கிராம நிா்வாக அலுவலா் லஞ்ச புகாரில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதி வடக்கு இடையபட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவா் அப்பகுதியில் அரசு அனுமதி பெற்று கிராவல் மண் எடுத்து வியாபாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்ட மண் அள்ளும் அனுமதி காலாவதி ஆனதாகவும் அச்சமயத்தில் நாகராஜ், சில குவியல் மண்ணை தனது இடத்தில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வந்த திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை கிராமம் கஸ்தூரி நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சரவண பாலகுருசாமி, நாகராஜிடம் மண் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி லஞ்சம் கேட்டு பேரம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா்(பொ) சாலைதவவளவன், விஏஓ சரவண பாலகுருசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். மேலும், பண்ணப்பட்டி மேல்பாகம் விஏஓவாக பணியாற்றி வரும் ஜெயக்குமாருக்கு கூடுதல் பொறுப்பாக புத்தாநத்தம் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



