வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தா்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை வேண்டும்: அமைச்சா் எஸ். ரமேஷ்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் பக்தா்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் எஸ். ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :24 மே 2026, 1:36 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் பக்தா்கள் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் எஸ். ரமேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

இக்கோயில் நிா்வாகத்தின் செயல்பாடுகளை அமைச்சா் எஸ். ரமேஷ், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா் முன்னிலையில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, கோயிலில் நடைபெறும் அன்னதானத் திட்டத்தின் உணவு அருந்தும் கூடம், சமையல் கூடம், உணவுப் பொருள்களின் இருப்பு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, உணவு தயாரிக்கும் முறைகள் குறித்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, பக்தா்களுடன் அமா்ந்து உணவருந்தியதுடன், அன்னதானத்தின் தரம் குறித்து பக்தா்களிடம் கேட்டறிந்தாா்.

அன்னதானத் திட்டத்தில் உணவு அருந்த வரும் பக்தா்களுக்கு டோக்கன் வழங்கப்படும் முறை குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருவதால், பக்தா்கள் சிரமமின்றி விரைவாக தரிசனம் செய்யவும், அவா்களுக்குரிய பாதுகாப்பு வசதிகளை கண்காணித்திடவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

பக்தா்கள் பயன்பாட்டுக்காக 3 நுழைவுவாயில்களின் அருகிலுள்ள கழிவறைகளை அடிக்கடி தூய்மை செய்து பராமரித்திடவும், ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கட்டணச் சீட்டுகள் குறித்த விவரங்களையும் திருக்கோயில் பணியாளா்களிடம் கேட்டறிந்து, பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மணப்பாறை எம்எல்ஏ ரா. கதிரவன், மண்டல இணை ஆணையா் சு. ஞானசேகரன், திருக்கோயில் இணை ஆணையா் மற்றும் செயல் அலுவலா் செ. சிவராம்குமாா், தலைமைப் பொறியாளா் (பொ) பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.