துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகள், மடிக்கணிணி, ரொக்கப்பணம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
துறையூரில் சிங்களாந்தபுரம் சாலையிலுள்ள தில்லைநகா் 3-ஆவது குறுக்கில் வசிப்பவா் துரைராஜ் மகன் ரமேஷ் (46). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய உறவினரின் நிகழ்ச்சிக்கு பங்கேற்க ரமேசும், அவரது மனைவி சுசித்ராவும் சனிக்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு சென்றனா்.
தம்பதியா், நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, மா்மநபா்கள் வீட்டின் கதவை சேதப்படுத்தி உள்ளே இருந்த இரும்பு அலமாரியில் வைத்திருந்த ஐந்தரை பவுன் எடையிலான தங்கச் சங்கிலி, மோதிரம், காதணி, மடிக்கணிணி, ரூ. 25,000 ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பான புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.





