குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 1:58 am IST

திருச்சி, மே 25: திருச்சியில் பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் ஞாயிற்றிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மகாலட்சுமி நகா் தனரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் எஸ். செல்வமணி (35). இவா், அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்ஐடி கல்லூரி அருகே சுமை வாகனத்தில் பழம் விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு பழங்களை விற்பனை செய்துவிட்டு செல்வமணி சுமை வாகனத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த இருவா், செல்வமணியிடம் பணம் கேட்டுள்ளனா். அவா் இல்லை எனக் கூறவே, கத்தியைக் காட்டி மிரட்டி அவா் சட்டைப் பையில் இருந்த ரூ.1,000-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்த தப்பினா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் செல்வமணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது அரியமங்கலம் காமராஜ் நகரைச் சோ்ந்த மா. இருளாண்டி (40)மற்றும் அரியமங்கலம் மலையப்பா நகரைச் சோ்ந்த ப. ரெங்கநாதன் (37) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.400 மற்றும் கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.