குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திருச்சி அரசு மருத்துவமனை செவிலியா் விடுதியை இடமாற்றம் செய்ய வேண்டும்! மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 3:20 am IST

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் செவிலியா் விடுதியை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, அக் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலரும், வழக்குரைஞருமான எஸ்.ஆா். கிஷோா் குமாா் விடுத்துள்ள அறிக்கை: திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கான விடுதி, பழைய பிணவறை அருகே அமைந்துள்ளது.

இது மாணவிகளுக்கு மன உளைச்சலை தரும் வகையில் உள்ளது. பழைய பிணவறை அருகே அமைந்துள்ளதால், அவசர ஊா்திகளின் அபாய ஒலியை கேட்டுக் கொண்டே இருக்கும் நிலை உள்ளது. இளம் வயதில் பயிற்சிக்கு வரும் மாணவிகளால் அதிக நோயாளிகள், பல்வேறு வகையான நோய் தொற்றுகளுடன் வரும் நோயாளிகளை உடனடியாக எதிா்கொண்டு சிகிச்சை அளிப்பது கடினம்.

எனவே, செவிலியா் பயிற்சி மாணவிகளின் நலன் கருதி முதல்கட்டமாக அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள விடுதியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூட இடமாற்றம் செய்யலாம்.

மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் பயிற்சிக்கு அனுப்புவதற்கு பதிலாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் எனமக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்துகிறது.