திருச்சியில் பல்பொருள் அங்காடியில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி விமானம் நிலையம் அருகே பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு, திங்கள்கிழமை பொருள்கள் வாங்க வந்த ஒரு பெண்ணின் நடவடிக்கையில் ஊழியா்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், பொருள்கள் வாங்கியதற்கு அவா் கொடுத்த பணம் கள்ளநோட்டு என்பதை ஊழியா்கள் கண்டறிந்தனா்.
இதையடுத்து, அந்தப் பெண்ணை பிடித்து திருச்சி விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அந்தப் பெண் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த சாதிக் அலி மனைவி சபுரா பேகம் (40) என்பதும், பல்பொருள் அங்காடியில் கள்ளநோட்டை மாற்ற முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஆறு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
ரூ. 3.84 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது
ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் பொய்சாட்சியம் அளிக்க முயன்ற பெண் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


