விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வள்ளலார் பிறந்த தின விழா

அரியலூர் லிங்கத்தடிமேடி சித்தசக்தி அருட்ஜோதி வள்ளலார் கல்வி நிலையத்தில் வள்ளலாரின் 195 ஆவது அவதார தின விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 1:59 am

DIN

அரியலூர் லிங்கத்தடிமேடி சித்தசக்தி அருட்ஜோதி வள்ளலார் கல்வி நிலையத்தில் வள்ளலாரின் 195 ஆவது அவதார தின விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, அந்த கல்வி நிலையத்தின் தலைவர் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் கணேசன் செட்டியார், நடராஜன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி நிலையத்தின் முன்னாள் தலைமை ஆசிரியர் இளங்கோவன், ரோவர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன், தயவு நிறை சுப்ரமணிய அடிகளார் ஆகியோர் பங்கேற்று, வள்ளலாரின் பிறப்பு மற்றும் அவரின் சேவைகளை மக்களிடம் எடுத்துரைத்தனர்.
விடுதி நுழைவுக் கதவு, விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சரவணவேலு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரம் உயர பொற்றோர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவில் பள்ளி தலைமை ஆசிரியர் பெ.சௌந்தராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.