குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பால் அவசியம் என உலக தாய்ப்பால் வார விழாவில் அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற உலக தாய்ப்பால் வாரவிழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மருத்துவர் நிரஞ்சனா, சமுதாய சுகாதார செவிலியர் முருகேஸ்வரி ஆகியோர், குழந்தை பிறந்தது முதல் இரண்டு ஆண்டுக்கு அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மூளை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சியடைவதுடன், குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்றனர்.கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!

முறையாகப் பராமரிக்கப்படாத ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையம்! மேம்படுத்தி விரிவுபடுத்த சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

விடுமுறை நாள்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் பயணம்!






