அரியலூர் வட்டம் கல்லங்குறிச்சி, அருங்கால், உடையார்பாளையம் வட்டம் காட்டகரம் (வ), உதயநத்தம் (மே),ஆண்டிமடம் வட்டம் திருகளப்பூர், செந்துறை வட்டம் அசாவீரன் குடிகாடு ஆகிய கிராமங்களில் பிப்.23-ல் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடி தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.