தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மீன்சுருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ.  ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டுப் பேரணியில் தாக்குதல் நடத்திய போலீஸாரைக் கண்டித்து அரியலூர் மாவட்டம்

News image
Updated On :1 மார்ச் 2018, 2:48 am

DIN

தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டுப் பேரணியில் தாக்குதல் நடத்திய போலீஸாரைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணியில் தாக்குதல் நடத்திய மாவட்டக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உள்ளிட்ட போலீஸாரை பணியிடைநீக்கம் செய்யக் கோரியும்,  அதை ஆதரித்து பேசிய ஹெச். ராஜாவை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணிவேல், தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னபாண்டியன், ஒன்றியச் செயலர் வெங்கடாசலம், மாவட்டக் குழு உறுப்பினர் துரைராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  ஒன்றியக் குழு உறுப்பினர் உத்திராபதி, ரமேஷ், மீனா, பத்மாவதி, குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பூபாலன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.