புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

அரியலூர் அருகே  ஏரியில் கிடந்த சுவாமி சிலை மீட்பு

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் கிடந்த வீரபத்திர சுவாமி பித்தளை சிலை ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:40 am IST

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் கிடந்த வீரபத்திர சுவாமி பித்தளை சிலை ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கிராம சின்ன ஏரியில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மாணவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த ஏரிக் கரை உள்புறத்தில் ஒரு சிலை கிடந்ததைக் கண்ட மாணவர்கள், ஊர் மக்களிடம் தெரிவித்தனர். 
இதையடுத்து ஊர் பொதுமக்கள் வந்து பார்த்து அளித்த தகவலின்பேரில் வந்த,விக்கிரமங்கலம்  காவல் ஆய்வாளர் பிரேமா,சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள பித்தளை வீரபத்திர சிலை என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.