மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி 148 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்வு

நிகழாண்டில் தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி 148 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்றார் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.

Updated On :23 ஜனவரி 2019, 7:20 am IST

நிகழாண்டில் தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தி 148 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்றார் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.
வேளாண் துறை,  கிரீடு வேளாண் அறிவியல் மையம்  சார்பில் அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகிலுள்ள சோழமாதேவி கிராமத்தில்  செவ்வாய்க்கிழமை வேளாண் திருவிழா தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
 விவசாயிகளின் உற்பத்தியை இரண்டு மடங்காகவும், வருமானத்தை மும்மடங்காக  ஆக்கவும் தமிழக அரசு  பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 
  உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதன் விளைவாக, கடந்த  மூன்று ஆண்டுகளாக கிரிஷி கர்மன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து வேளாண் துறை  பெற்றுள்ளது. தற்போது மக்கள் தொகைக்கு ஏற்ப, தேவையான நஞ்சில்லா தரமான உணவு அனைவருக்கும்  கிடைக்க வேளாண் துறை பல்வேறு தொழில்நுட்பங்களையும் மற்றும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. 
 விவசாயிகள் பயிர் சாகுபடியோடு கால்நடை பராமரிப்பு, மீன், காளான், பட்டுப்புழு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட  வேளாண் சார்ந்த  தொழில்களை ஒருங்கிணைந்து கடைப்பிடித்தால் அதிக லாபம் பெறலாம் என்றார் அவர். 
முன்னதாக விவசாய உபயோகப்பொருள்கள் அடங்கிய கண்காட்சியையும் கொறடா  பார்வையிட்டார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குநர் பழனிசாமி, தோட்டக்கலைத் துறை இயக்குநர் அன்புராஜன், திருச்சி ஆவின் துணைத் தலைவர் பிச்சமுத்து உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.