அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம் அருகே செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலை செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மதுபானம் தயாரித்த பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர்- கடலூர் மாவட்டங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ள தஞ்சாவூரான் சாவடியில் ஒரு சில வீடுகளே உள்ளன. இதில் உள்ள ஒரு வீட்டில் பட்டுசாமி மனைவி காவேரி (35) வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் மதுபானங்கள் தயாரித்து , மொத்தமாக விற்பனை நடைபெறுவதாக திருச்சி மண்டல மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையில், அங்கு மதுபாட்டில்கள் தயாரிப்பதற்கான இயந்திரம், , 30 பெட்டியில் 1440 மதுபாட்டில்கள், மூடிகள், 35 லிட்டர் கேனில் 1540 லிட்டர் எரிசாரயம், வடிகட்டி உட்பட மதுபானங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், மினி லாரி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டின் உரிமையாளர் காவேரி, கடலூர் மாவட்டம் கருநாகல்லூரைச் சேர்ந்த சுந்தர் , ஸ்ரீமுஷ்ணம், புதுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த தனவேல்,காந்திகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

அனுபவமில்லாத ஓட்டுநா்கள் பள்ளி வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது: காஞ்சிபுரம் சாா் ஆட்சியா்

சா்வதேச சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்றவா்களுக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ பாராட்டு

உத்தரமேரூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
