மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 4  பேர் கைது

அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம் அருகே செயல்பட்டு வந்த  போலி மதுபான ஆலை செவ்வாய்க்கிழமை

Updated On :23 ஜனவரி 2019, 8:01 am IST

அரியலூர் மாவட்டம் , ஆண்டிமடம் அருகே செயல்பட்டு வந்த  போலி மதுபான ஆலை செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மதுபானம் தயாரித்த பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர்- கடலூர் மாவட்டங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ள தஞ்சாவூரான் சாவடியில் ஒரு சில வீடுகளே உள்ளன. இதில் உள்ள ஒரு வீட்டில் பட்டுசாமி மனைவி காவேரி (35) வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் மதுபானங்கள் தயாரித்து , மொத்தமாக விற்பனை நடைபெறுவதாக திருச்சி மண்டல மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலீஸார் செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையில்,  அங்கு மதுபாட்டில்கள் தயாரிப்பதற்கான இயந்திரம், , 30 பெட்டியில் 1440 மதுபாட்டில்கள், மூடிகள், 35 லிட்டர்  கேனில் 1540 லிட்டர் எரிசாரயம், வடிகட்டி உட்பட மதுபானங்கள்  தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், மினி லாரி ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும்,  வீட்டின் உரிமையாளர்  காவேரி, கடலூர் மாவட்டம் கருநாகல்லூரைச் சேர்ந்த சுந்தர் , ஸ்ரீமுஷ்ணம், புதுகுப்பம்  கிராமத்தைச் சேர்ந்த தனவேல்,காந்திகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.