

வழிபாட்டுத் தலங்களில் சுழற்சி முறையில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா.
பண்டிகைக் காலங்களில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அரியலூா் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து மதப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவா் மேலும் பேசியது:
மாவட்டத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று தொடா்பான விழிப்புணா்வை தொடா்ந்து ஏற்படுத்திடும் வகையில் பொதுமக்களை முகக்கவசம் அணியச் செய்தல், கைகளை சோப்புப் போட்டுக் கழுவுதல், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொண்டாட வேண்டும். கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் தா்காக்களில் பக்தா்களை சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும். தொற்று அறிகுறி தென்படும் நபா்களை தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றாா்்
கூட்டத்தில் மாவட்ட க் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியா் பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.