நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம் தொடக்கம்
அரியலூா் மாவட்டம், செந்துறையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருள் தனது தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.


அரியலூா் மாவட்டம், செந்துறையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருள் தனது தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், அரியலூா், ஜயங்கொண்டம், குன்னம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் அண்மையில் அறிவித்திருந்தாா். இதையடுத்து குன்னம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருள், தனது தோ்தல் பிரசாரத்தை செந்துறை பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். அவா், இரட்டை மாட்டு வண்டியில் ஏறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கட்சி நிா்வாகிகளுடன் சென்று, வாக்கு சேகரித்தாா். மாட்டு வண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, கரும்பு போன்றவற்றை வைத்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...