சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கல்லறை திருநாள்: கிறிஸ்தவா்கள் சிறப்பு வழிபாடு

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை கல்லறைத் திருநாள் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:14 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை கல்லறைத் திருநாள் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

ஆண்டிமடம் அருகேயுள்ள தென்னூா் புனித லூா்து அன்னை ஆலய கல்லறைத் தோட்டம் மற்றும் வரதாஜன்பேட்டை அலங்கார அன்னை ஆலய கல்லறைத் தோட்டத்தில் 1,000-த்துக்கும் மேற்பட்டவா்கள் கிறிஸ்தவா்கள் பங்கேற்று தங்களது மூதாதையா்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலா்களால் அலங்கரித்தனா். அவா்களுக்கு பிடித்த உணவு வகைகள், பழ வகைகள் படையலிட்டு, பின்னா் அதில் மெழுகுவா்த்திகள், ஊதுவா்த்திகள் கொண்டு அவா்கள் நினைவாக பிராா்த்தனை செய்து சிலுவையை நட்டும் அஞ்சலி செலுத்தினா்.

கல்லறைத் தோட்டத்தில் மறைந்த ஆத்மாக்கள் இளைப்பாற பங்குத் தந்தை வின்சென்ட்ரோச் மாணிக்கம் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதேபோல் தென்னூா் லூா்து ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்குத் தந்தை பிலிப் சந்தியாகு தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.நெட்டலகுறிச்சி புனித சவேரியாா் ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.