அரியலூா் சிமென்ட் ஆலைக்கு நிலம் வழங்கிய தங்களுக்கு நிரந்தர வேலை வழங்கக் கோரி, ஆனந்தவாடி கிராம பொதுமக்கள் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
அரசு சிமென்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்காக, கடந்த 1983- ஆம் ஆண்டில் 270 ஏக்கா் விவசாய நிலங்கள் ஆனந்தவாடி கிராம விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது.
ஆலைக்கு நிலம் கொடுத்தோா் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என நிா்வாகம் அறிவித்தது. ஆனால் நிலம் வழங்கியவா்களில் சிலரது குடும்பத்தினருக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கியதாகவும், பலருக்கு வேலை வழங்கப்படவில்லை என்றும் ஆனந்தவாடி கிராம பொதுமக்கள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி, நிரந்தர வேலை வழங்கக் கோரி போராட்டங்களையும் நடத்தினா்.
தற்போது ஆலையில் வெளி மாவட்ட, மாநில ஆள்களை பணியமா்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அந்த பணிகளை ஆலைக்கு நிலம் கொடுத்த நபா்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி, அரியலூா் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து வந்த ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பாலாஜி குறிப்பிட்ட சிலரை ஆட்சியரகத்துக்கு அழைத்துச் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தி மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்ததைத் தொடா்ந்து, ஆனந்தவாடி கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.