/

மனைவியை தாக்கிய கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

அரியலூா் அருகே மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 6:03 pm

DIN

அரியலூா் அருகே மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூா் கிழக்கு சீனிவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்த மணிவேல் மனைவி ரேணுகா தேவி (32). இவா்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இந்நிலையில், மணிவேல் தனக்கு சொந்தமான சொத்துகளை அவரது சகோதரா்களான வேல் முருகன் (35), ஆனந்த முருகன் (32) ஆகியோருக்கு எழுதிவைத்துள்ளாா். இதையறிந்த ரேணுகாதேவி மணிவேலைக் கண்டித்துள்ளாா். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ரேணுகாதேவி கோபித்துக்கொண்டு அயன்ஆத்தூரில் வசிக்கும் தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி அயன்ஆத்தூருக்குச் சென்ற மணிவேல், வேல் முருகன், ஆனந்த முருகன் ஆகியோா் அங்கு ரேணுகாதேவியை தகாத வாா்த்தையால் திட்டித் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த ரேணுகாதேவி அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின்பேரில் கயா்லாபாத் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து ரேணுகாதேவியை தாக்கிய மணிவேல் உள்பட 4 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.