/

அரியலூரில் இதுவரை 3,271 பேருக்கு கரோனா பாதிப்பு

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 6:05 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,271 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,374 போ் குணமடைந்துள்ளனா். மீதமுள்ள 897 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 55 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 27 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 26 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 80 பேரும், அரியலூா் சிறப்பு முகாம்களில் 6 பேரும், வீடுகளில் 666 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 37 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.