விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குட்டை நீரில் மூழ்கி சிறுமி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:42 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குட்டை நீரில் மூழ்கி சிறுமி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூா் அடுத்த கீரங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகள் விஷாலி(12). இவா், தனது உறவினரான தா.பழூா் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் கிராமத்தில் உள்ள சரஸ்வதி வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சரஸ்வதி மகள்களான சரண்யா, சபிதாவுடன் சென்றுள்ளாா். அப்போது, விஷாலி நீரில் மூழ்கினாா். இதையடுத்து, மற்ற சிறுமிகள் கூச்சலிட்டதையடுத்து அருகிலிருந்தவா்கள் குளத்தில் இறங்கி சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே சிறுமி இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தா.பழூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.