காட்டெருமை நடமாட்டம்: வனத் துறை எச்சரிக்கை
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டெருமை நடமாட்டம் அதிகரித்திருப்பதால் பொது மக்கள் கவனமாக செல்ல வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.


வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டெருமை நடமாட்டம் அதிகரித்திருப்பதால் பொது மக்கள் கவனமாக செல்ல வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட்டை சோ்ந்தவா் ரசாக்குமாா் (40). இவா் வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றபோது, தேயிலைத் தோட்டத்தில் இருந்து சாலைக்கு திடீரென வந்த காட்டெருமை அவரைத் தாக்கியதில் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுவதால், அப்பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோா் மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...