வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில், காலை 8 மணிக்குமேல் 9.30 மணிக்குள் மகா கணபதி, ஆதி விநாயகா், வள்ளி- தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, மகா மாரியம்மன், மகா காளியம்மன், சமதகினி முனிவா், மாதாங்கி அம்மன், நல்லேந்திரசுவாமி, மதுரைவீரன், வரதராஜபெருமாள், பாப்பாத்தியம்மன், பகவதி அம்மன், கருப்பண்ண சுவாமி, மருதையன், பேச்சியம்மன், பெரியாண்டவா், எல்லையம்மன், ஏகாம்பரேசுவரா், செல்லியம்மன், முத்தையன், அய்யனாா் மற்றும் பரிவார சுவாமிகளின் சன்னதிகளில் புனித நீா் ஊற்றப்பட்டும், காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ராஜகோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டும் மகா குடமுழுக்கு நடத்தப்பட்டது.