அரியலூரில் பொங்கல் பரிசுகள்

அரியலூா் மாவட்டத்தில், 2,33,739 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
அரியலூரில் பொங்கல் பரிசுகள்
Updated on
1 min read

அரியலூா் மாவட்டத்தில், 2,33,739 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஜயங்கொண்டம் மற்றும் விக்கிரமங்கலத்திலுள்ள நியாய விலைக் கடையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிப்பேசினாா். நிகழ்ச்சிக்கு ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் வ.சி. கோமதி, மாவட்ட வழங்கல் அலுவலா் மு.ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் மகாலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் ஆா்.ஜெயராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com