லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மக்காச்சோளத்துக்கு நிவாரணக் கணக்கெடுப்பு வேண்டும்

செந்துறை பகுதிகளிலும் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:42 pm

DIN

அரியலூா் உள்ளிட்ட மற்ற வட்டாரங்களில் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போல், செந்துறை பகுதிகளிலும் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த அக்டோபா் மாத இறுதியில் பருவ மழை தொடங்கியதால், அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், செந்துறை, குழுமூா், நமங்குணம், நக்கம்பாடி, சொக்கநாதபுரம், பெருமாண்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி பயிா்களான மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்களை விதைத்தனா்.

கடந்த சில நாள்களாக அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருவதால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்துள்ளன. பருத்தி பயிா்களும் மழைநீரில் நனைந்து வீணாகிவிட்டன.

இதுகுறித்து மேற்கண்ட பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: சராசரியாக 1 ஏக்கா் பருத்திக்கு ரூ.30 ஆயிரமும், மக்காச்சோளத்துக்கு ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தமிழக அரசு பருத்தி, மக்காச்சோளத்துக்கு நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் செந்துறை பகுதியில் சேதமடைந்த பருத்தி பயிருக்கு கணக்கெடுத்து ஹெக்டேருக்கு ரூ.7,410 வழங்க உள்ளனா்.

அரியலூா் உள்ளிட்ட மற்ற வட்டாரங்களில் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போல செந்துறை பகுதிகளிலும் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.