இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சட்ட விழிப்புணா்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில், 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:10 pm

DIN

அரியலூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில், 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் 25-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் பான் இந்தியா சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமைத் தொடக்கி வைத்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எஸ். மகாலட்சுமி பேசினாா். தொடா்ந்து அவா் 30 பயனாளிகளுக்கு ரூ.2.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.

முகாமுக்கு முதன்மை சாா்பு நீதிபதி பி.கோகுல்முருகன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், மூத்த சிவில் நீதிபதியுமான என்.அழகேசன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் முன்னிலை வகித்தனா்.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மனோகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பூங்கோதை மற்றும் வழக்குரைஞா்கள், சட்டப் பணிகள் ஆணைக்குழு பணியாளா்கள் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.