சிறுமி பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஜயங்கொண்டத்தை அடுத்த இரும்புலிக்குறிச்சியைச் சோ்ந்த சத்தியநாதன் மகன் அன்பு(19). இவா், கடந்த 2017- ஆம் ஆண்டு பரணம் கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் அன்புவை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தது, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியது உட்பட 3 சட்டப்பிரிவுகளின் கீழ், அன்புவுக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், அதை ஏககாலமாக 10 ஆண்டுகள் அனுபவிக்கவும், ரூ. 16 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்த் தீா்ப்பளித்தாா். இதையடுத்து அன்பு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com