இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தலைமையாசிரியா் கொலை வழக்கில் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:07 pm

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ். ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த இவா், கடந்த 5-ஆம் தேதி த.சோழங்குறிச்சி சாலையில் கொலை செய்யப்பட்டு, சடலமாகக்

கிடந்தாா்.

இதுகுறித்து புகாரின் பேரில், உடையாா்பாளையம் காவல் ஆய்வாளா்(பொ) சண்முகசுந்தரம், உதவி ஆய்வாளா் வசந்த் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

விசாரணையில், ஜயங்கொண்டம், காமராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் வெங்கடேசன் (23), தனது பணத் தேவைக்காக தலைமையாசிரியா் செல்வ ராஜை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து காவல் துறையினா் அவரை சோழங்குறிச்சி சிவன் கோயில் அருகே வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவா் வைத்திருந்த இரு சக்கர வாகனம் மற்றும் பட்டாக் கத்தியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.