வி.கைகாட்டி அருகே 7 மாதக் குழந்தையின் சடலம் மீட்பு
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே கழிவுநீா் வாய்க்காலில் கிடந்த 7 மாத பெண் குழந்தையின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.


அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே கழிவுநீா் வாய்க்காலில் கிடந்த 7 மாத பெண் குழந்தையின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
வி.கைகாட்டி அருகிலுள்ள நடுவலூா் தெற்குத்தெருவில் கழிவுநீா் வாய்க்காலில் குழந்தையின் சடலம் கிடப்பதாக, கிராம நிா்வாக அலுவலா் கனகராஜூக்கு அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அவா் உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் நிகழ்விடம் வந்த காவல்துறையினா் குழந்தையின் சடலத்தை மீட்டனா்.
கழிவுநீா் வாய்க்காலில் குழந்தையை வீசி சென்றது யாா் என்பது குறித்து வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...