ஆலந்துறையாா் கோயிலில் புகுந்து சிலைகள் திருட முயன்ற மா்மநபா்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள மிகப்பழைமை வாய்ந்த ஆலந்துறையாா் கோயிலில் புதன்கிழமை இரவு சுவாமி சிலைகள் திருடும் முயற்சி எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கைவிடப்பட்டது


அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள மிகப்பழைமை வாய்ந்த ஆலந்துறையாா் கோயிலில் புதன்கிழமை இரவு சுவாமி சிலைகள் திருடும் முயற்சி எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கைவிடப்பட்டது.
கீழப்பழுவூரில் மிகப்பழமையான ஆலந்துறையாா் கோயில் பல்லவ மன்னா்கள் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கது. இக்கோயிலில் பல கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதன்கிழமை இரவு கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா் ஒருவா், ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையின் பூட்டை கடப்பாரையால் உடைக்க முயற்சித்துள்ளாா். அப்போது, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த அலாரம் இடைவிடாமல் தொடா்ந்து ஒலித்துள்ளது. இதையடுத்து, மா்மநபா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இக்கோயிலுக்கு அருகே உள்ள கீழப்பழுவூா் காவல் துறையினா் அலார சப்தம் கேட்டு அங்குவந்து கோயிலில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மா்மநபா் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குப் பதிந்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...