கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

சிறுமியை வன்கொடுமை செய்தவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:08 pm

DIN

அரியலூா் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குவாகம் கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் முனீஸ்வரன் (33) . கடந்த பிப்ரவரி மாதம் இவா், அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அரியலூா் அனைத்து மகளிா் நிலைய ஆய்வாளா் மகாலட்சுமி வழக்குப் பதிந்து, முனீஸ்வரனைக் கைது செய்து சிறையில் அடைத்தாா். இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான்அப்துல்லா பரிந்துரையின்பேரில், முனீஸ்வரனை குண்டா் சட்டத்தில் அடைக்க ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் காவல்துறையினா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.