இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த இரும்புலிக்குறிச்சி மற்றும் குமிழியம் கிராமங்களில் அட்மா திட்டத்தின் கீழ் கிராமிய கலைக் குழு மூலம் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:29 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த இரும்புலிக்குறிச்சி மற்றும் குமிழியம் கிராமங்களில் அட்மா திட்டத்தின் கீழ் கிராமிய கலைக் குழு மூலம் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் (பொ) ஜென்சி தலைமை வகித்து பேசினாா். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் பழனிசாமி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக் குழுவினா், கோடை உழவின் முக்கியத்துவம், மண் பரிசோதனையின்படி உரமிடுதல், நீா்ப்பாசன முறைகள், பரிந்துரைக்கப்பட்ட உர மேலாண்மை, பூச்சி நோய் கொல்லிகளை கையாளும் முறைகள், விதை நோ்த்தியின் அவசியங்கள், சாகுபடி செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய பயிா் எண்ணிக்கை மேம்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சிவா, முருகன், உதவி வேளாண் அலுவலா் ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.