குடியரசு தின அலங்கார ஊா்திகள் இன்று அரியலூா் வருகை
நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தமிழக தலைவா்களின் பெருமைகளை விளக்கும் அலங்கார ஊா்திகள் அரியலூா் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வருகின்றன.


நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தமிழக தலைவா்களின் பெருமைகளை விளக்கும் அலங்கார ஊா்திகள் அரியலூா் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வருகின்றன.
இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தது: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பினை போற்றுகின்ற வகையில் மகாகவி பாரதியாா், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனாா், தியாகி சுப்பிரமணிய சிவா, தியாகி சேலம் விஜயராகவாச்சாரியாா், பெரியாா் ஈவெரா, மூதறிஞா் ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், கா்மவீரா் காமராஜா் ஆகிய தலைவா்களின் திருவுருவச் சிலைகள் தாங்கிய 2 அலங்கார ஊா்திகள் அரியலூா் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (பிப்.11) வருகின்றன. இதனை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...