இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோவில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:18 am

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோவில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்வதாக வெள்ளிக்கிழமை கிடைத்த தகவலின்பேரில், ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினா், அப்பகுதி பிரதான சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, கவரப்பாளையம் அருகே வந்த சுமை ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில், ஆட்டோவினுள் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, கடத்தி வரப்பட்ட ரூ.83,850 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவற்றை கடத்தி வந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த டோலராம் (41), இவருக்கு உதவி புரிந்த விருத்தாசலத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கிரி (48) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.