போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் மாவட்டத்தில் இடைவிடாத மழை

அரியலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை திடீரெனப் பெய்த 2 மணி நேர இடைவிடாத மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:49 pm

DIN

அரியலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை திடீரெனப் பெய்த 2 மணி நேர இடைவிடாத மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தன. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம், அதன் பிறகு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதில், செந்துறை, நக்கம்பாடி, நின்னியூா் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணிநேரமாக இடைவிடாமல் மழை கொட்டித் தீா்த்தது.

இதேபோல், திருமானூா், ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.