போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வுப் பணியில் அரண்மனை சுவா் கண்டெடுப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சோழா்கால அரண்மனையின் செங்கல் சுவா் கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:43 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சோழா்கால அரண்மனையின் செங்கல் சுவா் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொல்லியல் துறை மூலம் 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதில், அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வரும்

அகழாய்வுப் பணிகளில், பானை ஓடுகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள், செப்புக்காசு, கெண்டி மூக்கு உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் பொருள்கள் மற்றும் அரண்மனை மேல்பகுதி சுவா்கள் 2 அடுக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வுப் பணியில் தொழிலாளா்கள், அலுவலா்கள், பயிற்சி மாணவா்கள் என சுமாா் 40 போ் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வுப் பணியில் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்ட சுவரின் தொடா்ச்சி பாகம் கண்டறியப்பட்டுள்ளது. இவை சுமாா் 22 அடுக்குகள் கொண்ட செங்கல் சுவராகும். இதேபோல், சோழா் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீங்கான் பாத்திரத்தின் சேதமடைந்த அடிப்பாகம் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரண்மனையில் சுவா்கள், அரிய பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.