/

முடிவுற்ற திட்டப் பணிகள் ஆய்வு

 அரியலூா் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :7 மே 2022, 6:59 pm

DIN

 அரியலூா் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டமான இலுப்பையூா் வேங்கன் ஏரி வடக்கு மற்றும் தெற்கு மதகுகள் கட்டும் பணி ரூ.21.48 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டதைப் பாா்வையிட்டு பொதுமக்களிடம் கருத்துகளைக்கேட்டறிந்தாா். தொடா்ந்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ஒட்டக்கோவில் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.05 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நூலகக் கட்டடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பொய்யாதநல்லூா் கிராமத்தில் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயி இளைபெருமாள் வயலை பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், மின்சார வாரிய செயற்பொறியாளா் பி.அய்யப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அகிலா, குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.