இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

80 பவுன் கொள்ளை வழக்கில் ம.பி. மாநிலத்தவா் 4 போ் கைது

அரியலூரில் தனியாா் சிமென்ட் ஆலை குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகைகளைச் திருடிச் சென்ற மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :26 மே 2022, 7:31 pm

DIN

அரியலூரில் தனியாா் சிமென்ட் ஆலை குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகைகளைச் திருடிச் சென்ற மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த 4 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூரை அடுத்த தாமரைக்குளம் கிராமத்தில் இயங்கி வரும் ராம்கோ சிமென்ட் ஆலைக் குடியிருப்புப் பகுதியில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 80 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தொடா்பாக அரியலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்தக் கொள்ளை சம்பவத்தில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த மா்மநபா்கள் 4 போ் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்துக்குச் சென்ற தனிப்படையினா், மத்தியப் பிரதேசம் மாநிலம், தாா் மாவட்டம், பகோளி கிராமத்தைச் சோ்ந்த போா்சிங் மகன் நான்காபெளரியா (26), ராஜூ மகன் காளியா (40), கம்ரூ மகன் அமீா் (28), குரு மகன் சா்தாா் ஹூரு ஆகிய 4 போ் மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக அரியலூா் வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அரியலூா் திரும்பிய தனிப்படையினா் வியாழக்கிழமை செந்துறை ரவுண்டானா பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,

மேற்குறிப்பிட்ட கொள்ளையா்கள் 4 பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து தூத்துக்குடி அனல் மின் நிலையக் குடியிருப்பில் கடந்த 12 ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டிருந்த 350 கிராம் வெள்ளி பொருள்கள், ஆயுதங்களைக் காவல் துறையினா் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.