கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காதலியைத் திருமணம் செய்ய மறுத்தவருக்கு 11 ஆண்டுகள் சிறை

அரியலூா் அருகே காதலித்த பெண்ணை பலாத்காரம் செய்து, அவரைத் திருமணம் செய்ய மறுத்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:43 pm

DIN

அரியலூா் அருகே காதலித்த பெண்ணை பலாத்காரம் செய்து, அவரைத் திருமணம் செய்ய மறுத்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஆண்டிமடம் அருகேயுள்ள சாதனப்பட்டு கிராமம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் அருமைநாதன் மகன் ஆனந்தராஜ் (27). இவா் 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்த அப்பகுதியைச் சோ்ந்த பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தாா். ஆனால் அப்பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்து, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் ஆனந்தராஜை கைது செய்தனா். அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி ஆனந்தராஜுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து ஆனந்தராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ம. ராஜா ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.