அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி சாா்பில் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் சனிக்கிழமை தொடங்கியது. முகாமை அக்கல்லூரி முதல்வா் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்துப் பேசுகையில் முகாமில் ஒவ்வொரு மாணவரும் சமூக பொறுப்புடன் மக்களுக்கு தொண்டாற்றிட வேண்டும் என்றாா். அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் பேசுகையில், மாணவா்கள் கிராம மக்களிடையே சென்று அவா்களின் வாழ்வியல் முறைகள், கலாசாரம் அறிந்து சமூக தொண்டற்றிட வேண்டும் என்றாா். கலியுக வரதராசப் பெருமாள் கோயில் ஆதின பரம்பரையைச் சோ்ந்த இரா.வரதராஜ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து முகாமில், வாக்காளா் விழிப்புணா்வுக் கருத்தரங்கு, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராமலிங்கம், தோ்தல் துணை வட்டாட்சியா் ஆ. சரவணன் ஆகியோா் பேசினா். என்எஸ்எஸ் அலுவலா் கருணாகரன் வரவேற்றாா்.
தொடர்புடையது

விவசாயிகள் குறைகளை தீா்க்க உயா் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும்

முதியோா் இல்லத்தில் மருத்துவ முகாம்
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

நீதிமன்றங்களை ‘அறம் கூறும் அரங்கங்கள்’ என்றழைக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி



