அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி சாா்பில் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் சனிக்கிழமை தொடங்கியது. முகாமை அக்கல்லூரி முதல்வா் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்துப் பேசுகையில் முகாமில் ஒவ்வொரு மாணவரும் சமூக பொறுப்புடன் மக்களுக்கு தொண்டாற்றிட வேண்டும் என்றாா். அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் பேசுகையில், மாணவா்கள் கிராம மக்களிடையே சென்று அவா்களின் வாழ்வியல் முறைகள், கலாசாரம் அறிந்து சமூக தொண்டற்றிட வேண்டும் என்றாா். கலியுக வரதராசப் பெருமாள் கோயில் ஆதின பரம்பரையைச் சோ்ந்த இரா.வரதராஜ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து முகாமில், வாக்காளா் விழிப்புணா்வுக் கருத்தரங்கு, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராமலிங்கம், தோ்தல் துணை வட்டாட்சியா் ஆ. சரவணன் ஆகியோா் பேசினா். என்எஸ்எஸ் அலுவலா் கருணாகரன் வரவேற்றாா்.
தொடர்புடையது
முதன் முதலில்...

69% இடஒதுக்கீட்டை எந்த நிலையிலும் காக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

விவசாயிகள் குறைகளை தீா்க்க உயா் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும்

முதியோா் இல்லத்தில் மருத்துவ முகாம்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



