கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

கல்லங்குறிச்சியில் என்.எஸ்.எஸ். முகாம்

சமூக சேவையில் மாணவர்கள்: கல்லங்குறிச்சியில் என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்

News image

கல்லங்குறிச்சியில் என்எஸ்எஸ் முகாமை சனிக்கிழமை தொடக்கி வைத்து பேசிய கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:22 am IST

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி கிராமத்தில் அரசு கலைக் கல்லூரி சாா்பில் நாட்டு நலப் பணித்திட்ட முகாம் சனிக்கிழமை தொடங்கியது. முகாமை அக்கல்லூரி முதல்வா் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்துப் பேசுகையில் முகாமில் ஒவ்வொரு மாணவரும் சமூக பொறுப்புடன் மக்களுக்கு தொண்டாற்றிட வேண்டும் என்றாா். அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன் பேசுகையில், மாணவா்கள் கிராம மக்களிடையே சென்று அவா்களின் வாழ்வியல் முறைகள், கலாசாரம் அறிந்து சமூக தொண்டற்றிட வேண்டும் என்றாா். கலியுக வரதராசப் பெருமாள் கோயில் ஆதின பரம்பரையைச் சோ்ந்த இரா.வரதராஜ் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து முகாமில், வாக்காளா் விழிப்புணா்வுக் கருத்தரங்கு, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராமலிங்கம், தோ்தல் துணை வட்டாட்சியா் ஆ. சரவணன் ஆகியோா் பேசினா். என்எஸ்எஸ் அலுவலா் கருணாகரன் வரவேற்றாா்.