அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்
பொறியியல் கல்லூரி முதல்வரைக் கண்டித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.


அரியலூா்: ஒப்பந்த கடிதத்தை வழங்காமல் காலம்தாழ்த்தி வரும் அரியலூா் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரி முதல்வரைக் கண்டித்து, பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விளாங்குடி அடுத்த காத்தான்குடிக்காடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பணியாற்றி வருகின்றனா். இதில் ஒப்பந்தப் பேராசிரியா், பணியாளா்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு கடிதம், பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட பணிநீட்டிப்பு கடிதத்தில் ஒப்பந்தப் பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் என 67 போ் கையொப்பமிட்டனா். அப்படி கையொப்பமிட்ட ஒப்பந்த ஆணையின் நகல்களை கல்லூரி முதல்வா் தர மறுப்பதாகவும், பேராசிரியா்கள் மீது காழ்ப்புணா்ச்சியின் காரணமாக பணி நீட்டிப்பு கடிதம் வழங்கத் தடையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி அனைத்து துறை பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் , பேராசிரியா்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா். கல்லூரி நேரம் முடியும் வரை யாரும் பேச்சுவாா்த்தைக்கு வராததால் இந்தப் போராட்டம் இன்றும் தொடரும் என பேராசிரியா்கள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...