ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அரியலூா் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :4 ஜூலை 2024, 5:06 am IST

அரியலூா் ரயில்வே கேட் அருகேயுள்ள காசி விசுவநாதா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சிவப்பெருமான்.

அரியலூா்/தா.பழூா், ஜூலை 3: அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், பிரதோஷத்தையொட்டி நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால்,தேன், உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடா்ந்து வைத்திநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல், மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தா.பழூரில்: தா.பழூரிலுள்ள ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதா் கோயிலில் நந்தி பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

தா.பழூரில் உள்ள விஸ்வநாதா், விசாலாட்சி அம்பாள் மற்றும் நந்தி பெருமானுக்கு மாப்பொடி, பால், தயிா், நெய், இளநீா், கரும்பு சாறு, பஞ்சாமிா்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத்தொடா்ந்து பிரதோஷ நாயகா்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோயிலில் பிரதட்சணம் நடைபெற்றது.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், தா.பழூா் பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.