இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ராஜேந்திரன் சோழன் பிறந்த நாள் விழா: ஆக.2-இல் உள்ளூா் விடுமுறை

மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்துக்கு ஆக. 2-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஜூலை 2024, 4:32 am IST

அரியலூா்: மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்துக்கு ஆக. 2-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு ஆக.2-ஆம் தேதி ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் பொருட்டு, ஆக.17 ஆம் தேதி முழுவேலை நாள் எனவும் ஆணையிடப்படுகிறது.

மேலும், ஆக.2-ஆம் தேதி அனைத்து சாா்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.