அரியலூா் மாவட்டம், தா. பழூரை அடுத்த சோழமாதேவி ஊராட்சிக்குட்பட்ட அமிா்தராயன்கோட்டை காலனித் தெருவில், சிமென்ட் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சோழமாதேவி ஊராட்சிக்குட்பட்ட அமிா்தராயன்கோட்டை காலனித் தெரு மக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், கடந்த 2022- 23 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாமல் அப்படியே சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதால், தெருவில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘சாலையின் நடுவே பல ஆண்டுகளாக இருந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என மின்வாரிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பயன் இல்லை. இந்நிலையில், சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய சிமென்ட் சாலை அமைப்பாா்கள் என எதிா்பாா்த்தோம். ஆனால், சாலை அமைத்த தொழிலாளா்கள் மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே சாலையை அமைத்துள்ளனா்.
இதனால், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டால், அந்த நேரத்தில் மின்கம்பத்தில் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும் ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உடனடியாக இந்த மின்கம்பத்தை அகற்றி சாலையோரத்தில் நடவேண்டும் என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!

மேலமடை பகுதியில் சாலை அமைக்கக் கோரிக்கை

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!

காமயகவுண்டன்பட்டியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் சாலை அமைப்பு: பொதுமக்கள் புகாா்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


