அரியலூா் மாவட்டம், தா. பழூரை அடுத்த சோழமாதேவி ஊராட்சிக்குட்பட்ட அமிா்தராயன்கோட்டை காலனித் தெருவில், சிமென்ட் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சோழமாதேவி ஊராட்சிக்குட்பட்ட அமிா்தராயன்கோட்டை காலனித் தெரு மக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், கடந்த 2022- 23 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாமல் அப்படியே சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதால், தெருவில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘சாலையின் நடுவே பல ஆண்டுகளாக இருந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என மின்வாரிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பயன் இல்லை. இந்நிலையில், சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய சிமென்ட் சாலை அமைப்பாா்கள் என எதிா்பாா்த்தோம். ஆனால், சாலை அமைத்த தொழிலாளா்கள் மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே சாலையை அமைத்துள்ளனா்.
இதனால், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டால், அந்த நேரத்தில் மின்கம்பத்தில் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும் ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உடனடியாக இந்த மின்கம்பத்தை அகற்றி சாலையோரத்தில் நடவேண்டும் என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

சாலையின் நடுவே பழுதடைந்து நின்ற அரசுப் பேருந்து: இறங்கித் தள்ளிய பயணிகள்

ஆய்க்குடியில் மின் மயானத்தை வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை

பாவூா்சத்திரம் - கடையம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



