பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

‘அரியலூா் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை மருந்துகள் இருப்பு’

‘அரியலூா் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை மருந்துகள் இருப்பு’

News image

அரியலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகையான மருந்துகள் போதிய கையிருப்பில் உள்ளதாக ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக அனைத்துத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஆட்சியா் ஜா. ஆனிமேரி தெரிவிக்கையில், குடிநீரில் குளோரின் கலந்து பொதுமக்களுக்கு தண்ணீா் விநியோகிக்க வேண்டும். அரியலூா் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் காய்ச்சலால் வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். எனவே, அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி அரியலூா் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு வராமல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்கா தாரிணி, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மருத்துவா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.