வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நூறு நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி மறியல்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிலுப்பனூா் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சிலுப்பனூரில் 100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :20 நவம்பர் 2024, 7:11 pm

Din

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிலுப்பனூா் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

படவிளக்கம்: சிலுப்பனூரில் 100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

அக்கிராமத்தில் உள்ள காலனித் தெரு மக்களுக்கு இந்தத் திட்டத்தில் 100 நாள்கள் கணக்கு முடிந்து விட்டதாக ஊராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 30 நாள்களே வேலை வழங்கியதாகவும், மீதமுள்ள நாள்களுக்கு வேலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை முறையாக அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, செந்துறை - தளவாய் - பெண்ணாடம் சாலையில் சிலுப்பனூா் கிராமத்தில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த தளவாய் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.