வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மத்திய அரசைக் கண்டித்து அரியலூரில் நவ.26-இல் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து அரியலூரில் செவ்வாய்க்கிழமை (நவ.26) ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:14 pm

Din

மத்திய அரசைக் கண்டித்து அரியலூரில் செவ்வாய்க்கிழமை (நவ.26) ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்ட அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் ஏஐடியுசி அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏஐடியுசி தண்டபாணி, தொமுச அன்பழகன், சிஐடியு துரைசாமி, சிற்றம்பலம், எச்எம்எஸ் ராமசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அத்தியாவசியப் பொருள்களின மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். தேசிய குறைந்தப்பட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிா்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரில் நவ.26-இல் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.