வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: அரியலூரில் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் வருவாய் வட்டத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆட்சியா் பொ. ரத்தினசாமி கள ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

Updated On :21 நவம்பர் 2024, 9:56 pm

Din

அரியலூா் வருவாய் வட்டத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆட்சியா் பொ. ரத்தினசாமி கள ஆய்வு மேற்கொண்டாா்.

அரியலூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் சிறப்பு முகாம் புதன்கிழமை தொடங்கியது.

2-ஆவது நாளான வியாழக்கிழமை அரியலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி, பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா்கள் விடுதி, விளாங்குடி ஆவின் பால் குளிா்விப்பு மையம், தேளூா் பகுதியில் புதிய அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட இடம், விளாங்குடி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, விளாங்குடி மற்றும் முனியங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், செட்டித்திருக்கோணம், நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை ஆட்சியா் பாா்வையிட்டு அங்கு மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்ட அமலாக்கத்தையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.