விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

1,357 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்

1,357 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:41 pm

Din

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம், ஜெயங்கொண்டம் மற்றும் மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,357 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

உடையாா் பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், உடையாா்பாளையம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 177 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதேபோல், ஜெயங்கொண்டம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 771 மாணவ, மாணவிகளுக்கும், மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 409 மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தன், ஜெயங்கொண்டம் நகா்மன்றத் தலைவா் சுமதி சிவகுமாா், துணைத் தலைவா் வெ.கொ.கருணாநிதி, உடையாா்பாளையம் பேரூராட்சி தலைவா் மலா்விழி ரஞ்சித்குமாா், துணைத் தலைவா் அக்பா் அலி மற்றும் பள்ளி தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.