பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.25)தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:26 pm

Din

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.25)தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.

முகாமில் கலந்து கொள்ள 18 முதல் 35 வயது வரையிலான 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.