அரியலூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.25)தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.


அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.25)தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது:
அரியலூா் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.
முகாமில் கலந்து கொள்ள 18 முதல் 35 வயது வரையிலான 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...